பன்றிகள் தொல்லை

Update: 2023-04-05 12:14 GMT


நாகை மாவட்டம் ஐவநல்லூர், ஜெகநாதபுரம், புத்தூர் ஆகிய கிராமங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்தி விடுகிறது. மேலும் சாலையில் சுற்றித்திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்