நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-29 16:08 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி மந்திரி கவுண்டர் தெரு 13-வது வார்டில் சாக்கடை கால்வாய் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் நீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகரித்து நோய் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் அந்த வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

-பரணி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்