சுகாதார சீர்கேடு

Update: 2023-03-22 15:26 GMT

ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் நூற்றுக்கணக்கான ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் இருந்து இலைகள், கழிவுகள் போன்றவற்றையும் குப்பை கூளங்களையும் சர்வீஸ் ரோட்டில் கல்லூரி அருகே கொட்டுகின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தும் ஓட்டல் நடத்துபவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்து வருகின்றனர். இதனால் கல்லூரி மாணவர்கள், நடந்து செல்பவர்கள் முகம் சுழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை ஓரத்தில் குப்பை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ஊராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசு, ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்