சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-03-19 17:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரில் 3 ரோடு பகுதியில் இந்திரா காந்தி சிலை அருகே சாலையின் மேற்பரப்பிலேயே சாக்கடை நீர் செல்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் தோண்டப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில் இந்த சாக்கடை நீர் சாலையின் மேற்பரப்பில் செல்கிறது. எனவே கழிவுநீர் சாக்கடை கால்வாயில் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்