சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-15 17:07 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் கோழிகழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பாலிதின் குப்பைகள் தேங்கி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டடுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கிருஷ்ணா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்