கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2023-02-12 16:51 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சி வெள்ளிச்சந்தை மெயின் ரோடில் இருந்து எம்.செட்டிஅள்ளி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பன்னீர்செல்வம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்