வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-02-01 13:23 GMT


மயிலாடுதுறை மாவட்டம் வடகரை ஜவஹர் தெரு சந்திப்பில் வங்கி, தபால் நிலையம், ரேஷன் கடை ,தனியார் பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இந்தநிலையில் தற்போது மழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜவஹர் தெரு, மயிலாடுதுறை

மேலும் செய்திகள்