சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-01-18 15:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணனஅள்ளி பகுதியில் ராஜவீதி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த வீதிகளை ஒட்டியுள்ள ஏரியில் இருந்து வெளியேறும் விஷ பூச்சிகள் சாக்கடை கால்வாய்களில் தஞ்சம் புகுவதுடன் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்