வடிகால் வசதி வேண்டும்

Update: 2023-01-18 11:03 GMT


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் பஸ் நிலையத்திற்கு அருகில் சாக்கடை வாய்க்கால் கழிவு நீர் வடிய வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் செல்லும் வாய்க்கால் மேல்பகுதி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கடையூர்.

மேலும் செய்திகள்