மயிலாடுதுறை மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஆவையாம்பாள்புரம் தெருவில் கழிவு நீர் தேங்கியுள்ளது. அதன் அருகில் குப்பைகள் இருக்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை.