திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய்

Update: 2023-01-04 15:05 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி மையப் பகுதியில் கழிவுநீர் கால்வாயின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் திறந்த வெளியில் உள்ள கழிவுநீர் கால்வாயால் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் இந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் வாய்ப்புள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஞானவேல், சிக்க மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்