மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் செல்லும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை