சாலையில் வழிந்தோடும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-11-27 13:54 GMT

பெங்களூரு தொட்டகம்மனஹள்ளி நோபல் பிரசிடென்சி ரோட்டில் கடந்த சில தினங்களாக சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அந்த ரோட்டின் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர்.

அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் செல்கின்றனர். பிரச்சினை குறித்து குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சரிசெய்யவில்லை. இந்த பிரச்சினை தீர்வது எப்போது?

மேலும் செய்திகள்