சுகாதார சீர்கேடு

Update: 2022-11-23 17:27 GMT

சேலம் பெரமனூரில் உள்ளது காளியப்பசெட்டியார் காலனி. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாராததால் சாக்கடைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சாக்கடை நீரில் இருந்து விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோபால், காளியப்பசெட்டியார் காலனி, சேலம்.

மேலும் செய்திகள்