சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-16 17:44 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டோல்கேட் அருகில் கோட்டக் கவுண்டன்பட்டியில் இருந்து பாகல்பட்டி செல்லும் வழியில் ரெயில்வே சுரங்கப்பாதை சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. மழைக்காலம் வந்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இவ்வழியே பயணம் செய்கின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

-ஜோசப், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்