நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-16 17:20 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி காந்திநகர் 14-வது வார்டில் பட்டாளம்மன் கோவில் பின்புறம் சில நாட்களாக மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் அவர்களின் நலன் கருதி தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தி நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்