பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

Update: 2022-11-09 15:35 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த என்.எஸ்.ரெட்டியூர் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தை மகளிர் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் வசதி செய்து தரக்கோரி, பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பூட்டியே வைத்துள்ளனர். எனவே சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து தருவதுடன், மகளிர் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பார்வதி, நல்லசேனஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்