கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2022-11-06 16:19 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்கு என்று சிறுநீர் கழிப்பிடம் திறக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பிடத்தை பூட்டியதால் பெண்கள் அருகில் உள்ள பாதாள சாக்கடை அருகே சிறுநீர் கழிக்கிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் விழும் அபாயம் உள்ளது, எனவே நகராட்சி நிர்வாகம் பூட்டியுள்ள கழிப்பிட கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-சந்தோஷ், ராசிபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்