சாலையோரம் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-11-02 15:26 GMT

பெங்களூரு கனகபுரா ரோடு தொட்டகம்மனஹள்ளி பகுதியில் சாலையோரமாக கடந்த சில தினங்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் அங்கு குப்பை கழிவுகளும் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு தான் நடந்து செல்கின்றனர். கழிவுநீர், குப்பைகளை அகற்றுவதோடு அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

மேலும் செய்திகள்