கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-10-30 16:38 GMT

நாமக்கல் நகராட்சி 17-வது வார்டு லட்சுமி நகரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்த பகுதியில் இருந்த வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, நாமக்கல்.

மேலும் செய்திகள்