கழிவுநீர் கால்வாய் தேவை

Update: 2022-10-30 15:51 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கொரவாண்ட‌அள்ளி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பள்ளம் வெட்டி அதில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்தனர். இந்த பகுதியில் சிறுவர்கள் அதிகம் விளையாடுகிறார்கள். அவ்வாறு சிறுவர்கள் விளையாடும் போது பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்