கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா ?

Update: 2022-10-23 15:12 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் எம்.செட்டி‌அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் தனியார் பள்ளி முன் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணசேகரன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்