புதர் மண்டிய கழிவுநீர் கால்வாய்

Update: 2022-10-23 14:53 GMT

கிருஷ்ணகிரி நகராட்சி கோ-ஆப் காலனி 3-வது கிராஸ்க்கு உட்பட்ட கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக தூர்வாராமல் புதர்மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

-பார்த்திபன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்