அடிப்படை வசதி தேவை

Update: 2022-10-16 17:04 GMT

கிருஷ்ணகிரி தேவ சமுத்திரம் ஊராட்சி முல்லைநகர் அக்ரஹாரம் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பகுதிகளில் லேசான மழை பெய்தால் கூட வீட்டைச்சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மழைக்காலங்களில் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரிவதில்லை. சாக்கடை கால்வாய் வசதி உள்பட எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

-கார்மேகம், முல்லைநகர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்