பயன்படாத சுகாதார வளாகம்

Update: 2022-10-12 17:00 GMT

தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவலைக்காரன்கொட்டாய் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இந்த வளாகம் திறக்கப்பட்டு ஒருசில வருடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வருடக்கணக்காகியும் பயன்படாமல் காணப்படுகிறது. இந்த வளாகத்திற்கு முறையான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தராததால், சுகாதார வளாகம் விஷப்பூச்சிகளின் இருப்பிடமாக மாறியுள்ளதுடன் கழிப்பறை கோப்பைகள் சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து, முறையாக மகளிர் பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகத்தை மேம்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, கவலைக்காரன்கொட்டாய், தர்மபுரி.

மேலும் செய்திகள்