பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2022-10-12 16:55 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-கண்ணன், தர்மபுரி.

மேலும் செய்திகள்