மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-10-09 17:40 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரத்தில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக. சில ஆண்டுகளுக்கு முன் கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சரியான பராமரிப்பில்லாமல் கழிப்பிடம் சேதமடைந்து பூட்டப்பட்டது. இதனால் மக்கள் திறந்தவெளி பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிப்பிடத்தை சீரமைத்து திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜேஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்