சுகாதாரம் இல்லாத கழிப்பிடம்

Update: 2022-10-09 16:58 GMT

ஓசூரில் தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளிட்டவை ஒரே வளாகத்தில் அமைந்து உள்ளன. இங்கு உள்ள பொது கழிப்பிடம் முட்புதர்களால் ஆக்கிரமித்து சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து சுகாதாரமாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-அரவிந்த், ஓசூர்.

மேலும் செய்திகள்