கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-09 16:55 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஅள்ளி ஊராட்சியில் பொதுபணித்துறை கால்வாய் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு உபரிநீர் செல்கிறது. இந்த கால்வாய் எர்ரணஅள்ளி ஊராட்சியில் இருந்து பேளாரஅள்ளி ஊராட்சி தாமரை ஏரி வரை சுமார் 2 கி.மீ. தூரம் செல்கிறது. இடைப்பட்ட இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் உபரி நீர் ஆங்காங்கே குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கிறது. எனவே இந்த கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, எர்ரணஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்