சேதமடைந்த சாக்கடை கால்வாய்

Update: 2022-10-05 17:13 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பரளி ஊராட்சி மேல் பரளியில் இருந்து கீழ்பரளி செல்லும் குறுக்கு சாலையில் கழிவுநீர் சாக்கடை கால்வாய் செல்கிறது. அந்த சாக்கடை கால்வாயின் சிமெண்டு மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் 2 இடங்களில் இடிந்து சேதாரமாகி உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் செல்வோரும், புதியதாக வருபவரும் திடீரென குழிக்குள் விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் அதை சரி செய்ய வேண்டும்.

-ராசப்பன், அணியாபுரம், நாமக்கல்.

மேலும் செய்திகள்