கழிவுநீர் கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2022-10-05 17:09 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா இருப்பாளி வாரச்சந்தை அருகில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர், கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் சீர்கேடு ஏற்படுவதுடன் பொது மக்களுக்கு தொற்று நோயும் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பன்னீர்செல்வம், இருப்பாளி, சேலம்.

மேலும் செய்திகள்