கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2022-09-28 16:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தர்மபுரி, கிருஷ்ணகிரி ரோடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாலைகளின் இருபுறமும் ஒரே நேரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க முடியாமலும், வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-அய்யனார், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்