மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் கட்டணமில்லா பயணிகள் கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் , பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறையை திறந்து விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை