தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-09-27 13:21 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மேலத்தெரு வரை மழை நீர் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இதில் ஒரு சில இடங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. அருகில் குடியிருப்புகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்