நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-24 17:37 GMT

ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அலசநத்தம் ஏரி கரையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், ஓசூர்.

மேலும் செய்திகள்