வேகத்தடைைய சீரமைப்பார்களா?

Update: 2024-03-24 17:58 GMT

வேலூர் செங்காநத்தம் மலை மீது சமீபத்தில் தார் சாலை போடப்பட்டது. மேலும் வளைவுப் பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்கு ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வேகத்தடையை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் வளைவுப் பகுதியில் செல்லும்போது கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் வேகத்தடையை சீரமைப்பார்களா?

-சுந்தர், செங்காநத்தம்.

மேலும் செய்திகள்