தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-07-05 17:21 GMT
உளுந்தூர்பேட்டை அடுத்த நெடுமானூர் கிராமத்தில் உள்ள சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சாலை பலத்த சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்