தாரமங்கலம் போக்குவரத்து பணிமனை அருகே 4 ரோடு கிராஸ் உள்ளது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களும், பாத சாரிகளும் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அரசு பணிமனை அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.