கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாதையான திருச்சி-தோகைமலை பிரதான சாலை, இருவழிச்சாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், தற்போது இடையபட்டி, வெள்ளபட்டி பகுதிகளில் கடும் சேதமடைந்துள்ளது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் விரிசலடைந்து, குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதால், அவசர கால ஆம்புலன்ஸ்கள் மற்றும் கல்லூரி, மருத்துவமனைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை புதிய தார்ச்சாலை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.