குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-05 13:47 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய் மலை பாலசுப்பிரமணியர் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் திருமண மண்டபங்கள் அதிகம் உள்ளதால் முகூர்த்த நாட்களில் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும். அவ்வாறு வரும் பொதுமக்கள் குண்டும், குழியுமாக உள்ள சாலையால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்