ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-07-05 13:18 GMT

மொரப்பூர் அடுத்த நவலை ஊராட்சி அண்ணாமலைப்பட்டியிலிருந்து அம்மாபேட்டை வழியாக காட்டனூர் செல்லும் தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் இந்த குழிகளில் குளம்போல் தண்ணீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே குண்டும் குழியுமான ஆபத்தான இந்த தார் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்