வேலூர் கோட்டை நுழைவு வாயில் அருகே அகழி சுவர் ஓரம் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் அருகே மண் சரிவு ஏற்பட்டு பெரிய பள்ளம் தோன்றி உள்ளது. இந்தப் பள்ளத்தால் அகழி சுவருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமாமகேஸ்வரன், வேலூர்.