மேம்பால பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2022-12-04 11:16 GMT

ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்தச் சாலையை கடக்க முயற்சி செய்யும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தைத் தடுக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சாலை ஓரம் பள்ளம் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணி தொடர்ந்து நடக்காமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கிறது. மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கடேசன், ஆற்காடு. 

மேலும் செய்திகள்