உத்தமபாளையம் பைபாஸ் சாலை, தேரடி வீதி, பஸ் நிலைய சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் சாலை சுருங்கி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.