நெடுஞ்சாலையோர முட்புதர்களை அகற்றுவார்களா?

Update: 2026-06-21 19:27 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரிமலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மங்கலம் கூட்ரோடு முதல் நிலாவூர் வரை நெடுஞ்சாலையோரங்களில் தேவையற்ற செடிகள், முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதனால் வளைவு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சாலை ஓரங்களில் உள்ள முட்புதர் செடிகளை அகற்ற வேண்டும்.

-தர்மலிங்கம், ஏலகிரிமலை.

மேலும் செய்திகள்