சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-23 11:51 GMT

வேலூர் சங்கரன்பாளையம் ரிஜிஸ்டர் பெரியசாமி தெருவில் உள்ள சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. தார் சாலை தரமற்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால் சாலை முழுவதும் ஆங்காங்கே சேதமாகி பள்ளங்கள் தோன்றியும், விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதம் அடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-ராஜமாணிக்கம், வேலூர்.

மேலும் செய்திகள்