சாலையோர கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-12-24 17:02 GMT

வாலாஜாவை அடுத்த ஒழுகூர் ஏரிக்கரை அருகில் குறுகிய சாலையோரம் பெரிய தரைக்கிணறு உள்ளது. அதில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் கிணறு இருப்பதே தெரியாமல் நிலத்தோடு நிலமாக உள்ளது. இந்த வழியாக பலர் சென்று வருகின்றனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கிணற்றில் பாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தரைமட்ட கிணறுக்கு தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

-பிரசாத், ஒழுகூர். 

மேலும் செய்திகள்