அரக்கோணம் பஜார் தெருவில் உள்ள சிமெண்டு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் முதியவர்கள், மாணவர்கள், நடந்து செல்லும்போது தவறி கீழே விழுகின்றனர். மோட்டார்சைக்கிளில் செல்பவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய சிமெண்டு சாலையை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சாலை அமைத்துத்தர வேண்டும்.
-ராம்குமார், அரக்கோணம்.