சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே நந்தியாறு ஓடுகிறது. அந்த ஆற்றுப்பாலத்தின் பக்க வாட்டில் தடுப்புச்சுவர் இல்லை. பாலமும் சேதம் அடைந்துள்ளது. அந்தப் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.