முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளும் சாலை பணி

Update: 2023-03-26 17:07 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலை முன்னறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சர்வீஸ் சாலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் டோல்கேட் வரை சென்று, அங்கிருந்து திரும்பி வரும் அவல நிலை உள்ளது. இதனால் நேரம் மட்டுமின்றி பெட்ரோல் வீணாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைவில் சாலையை சீரமைக்க வேண்டும்.

-இல. குருசேவ், கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்